For Daily Alerts
Just In
ரயில்,பஸ் போக்குவரத்து தொடங்கியது
மதுரை:
மதுரை வழியாக சென்னைக்கு ரயில், பஸ் போக்குவரத்து தொடங்கியது
தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்ததன் காரணமாக மதுரை, திருச்சி, கடலூர், சிவகங்கை உள்பட பல்வேறுமாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொடைரோடு அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 23ம்தேதி நள்ளிரவில் பெரிய பாறாங்கல் உருண்டு விழுந்தது.திருச்சி அரியலூர் அருகே ரயில் தண்டவாளம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. அதனால் ரயில்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அன்றைய தினம் பாண்டியன், முத்துநகர், நெல்லை, கன்னியாகுமரிஎக்ஸ்பிரஸ் ரயில்கள் வழிகளில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதனால் தென்மாவட்ட ரயில்கள் முற்றிலும் ரத்துசெய்யப்பட்டது. சென்னை-கன்னியாகுமரி, பாண்டியன், முத்துநகர், கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள்நேற்று முதல் இயக்கப்பட்டன.
இதே போன்று மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ் போக்குவரத்தும் தடைபட்டு பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் சாலைகள் சரி செய்யப்பட்டு நேற்று பஸ் போக்குவரத்தும் தொடங்கியது.
Comments
Story first published: Sunday, November 27, 2005, 5:30 [IST]