வீராணம் ஏரி உடையும் அபாயம்
கடலூர்:
வீராணம் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வீராணம் ஏரி சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.இதனால் அணையில் எப்போதும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும்.கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்காலும், தொடர் மழையினாலும் வீராணம் ஏரி நீர்மட்டம் கிடு கிடு வென உயர்ந்து நிரம்பிவழிய தொடங்கியது. ஏரி உடையும் அபாயத்தை தடுக்க ஏரியில் இருந்து வெள்ளாற்றிலும், வெள்ளியங்கால் ஓடையிலும்தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது.
தற்போது வீராணம் ஏரிக்கு 14,000 கன அடி நீர் வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.5 அடி ஆகும். ஆனால் 2 அடிஅதிகமாக 49.05 அடி தண்ணீர் உள்ளது.
ஆபத்தில் இருந்து ஏரியை பாதுகாக்க நீர்மட்டத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரியில் இருந்துவெள்ளியங்கால் ஓடை வழியாக 15,000 கன அடியும் வெள்ளாற்றில் 3,000 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.அதாவது ஏரிக்கு வரும் தண்ணீரை விட அதிகப்படியாக வெளியேற்றப்படுகிறது.
இதனால் வெள்ளம் சூழ்ந்த கிராமங்களுக்கு மேலும் தண்ணீர் செல்கிறது. இதனால் வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.