காய்கறி, பால் தட்டுப்பாடு: அரிசி விலை உயர்வு, ஆம்னி பஸ்சில் விமான கட்டணம்
சென்னை:
கனமழை காரணமாக சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சந்தைகளுக்கும்தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் வழக்கத்தைவிட குறைந்த அளவிலேயே காய்கறிகள் வருகின்றன. எனவே காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு குறைந்த அளவில் வரும் காய்கறிகள் மளமளவென விற்பனையாகிறது. இதனால்காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. காய்கறிகள் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து விட்டது.அதே போல எல்லா மாவட்டங்களிலும் கடும் மழை காரணமாக காய்கறி, பால், அரிசி போன்ற அத்தியாவசிய பண்டங்களின்விலைகள் உயர்ந்துள்ளது. எனவே பாலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியது. அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் தக்காளி கிலோ ரூ.25க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.20க்கும், வெங்காயம் கிலோ ரூ.14க்கும் உருளைக்கிழங்குகிலோ ரூ.16க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதை தொடர்ந்து கடும் மழை காரணமாக சாலைகள் ஆங்காங்கே பாதிக்கப்பட்டுள்ளதால் தனியார் வாகனங்கள் தங்களின்கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளனர்.
தனியார் ஆம்னி பஸ்கள் சென்னையிலிருந்து மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை அகியஇடங்களுக்கு இயக்கப்படுகின்றன. அவர்கள் வழக்கமாக மதுரைக்கு சாதாரண வண்டியில் ரூ.290 முதல் 320 வரையும், ஏசிவண்டிக்கு ரூ.350 முதல் 380 வரை வசூலித்து வந்தனர்.
தற்போது சாதராண வண்டிக்கு ரூ.500 முதல் 550 வரை கேட்கின்றனர். ஏசி வண்டிக்கு ரூ.750 வரை வாங்குகின்றனர்.
இது குறித்து விசாரித்தபோது, பஸ்கள் சேலம் வழியாக சுற்றிக் கொண்டு செல்வதால் தூரம் அதிகமாகிறது என்றும், இதனால் தான்கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications