சிங்கப்பூர்- சென்னை விமானம் ஏற்படுத்திய பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் விமானம், தரையிறங்கியபோது அதன் முன் சக்கரம் சுழலாமல்சிக்கிக் கொண்டது. இதனால் அந்த விமானம் ஓடாமல் நின்றுவிட்டது.
இன்று காலை 9.50 மணிக்கு 265 பயணிகளுடன் அந்த விமானம் தரையிறங்கியது. ரன்வேயில் ஓடி முடித்து டாக்சி வேயில்திரும்பும்போது அதன் முன் பக்கச் சக்கரங்களில் ஒன்று சுழலாமல் ஸ்டக் ஆகிவிட்டது. இதனால் அந்தச் சக்கரம் தேய்ந்தவாரேவிமானம் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.ரன் வேயில் சக்கரம் தேய்ந்ததால் புகை கிளம்பியது. பெரிய அளவில் சத்தமும் உருவானது. இதையடுத்து தீயணைப்பு வண்டிகள்விமானத்தை நோக்கி விரைந்தன. ஆனாலும் பிரச்சனை ஏதுமின்றி அந்த விமானம் நின்றுவிட்டது.
ரன்வேயை அடைத்துக் கொண்டு அந்த விமானம் நின்றுவிட்டதால், அடுத்ததாக அங்கிருந்து கிளம்பவிருந்த முதல்வர்ஜெயலலிதாவின் செஸ்னா விமானம் 10 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வெள்ளச் சேதத்தைப்பார்வையிட அந்த விமானத்தில் உயர் அதிகாரிகளுடன் ஜெயலலிதா கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications