பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 1,000, 10 கிலோ அரிசி, மண்ணெண்ணெய்: ஜெ அறிவிப்பு
மதுரை:
தமிழகத்தில் மழை நிவாரணப் பணிகளுக்கு முதல் கட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையான ரூ. 500 கோடிபோதாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இன்று மதுரை, சிவங்கை பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமும் பின்னர் நேரிலும் வெள்ளச் சேதத்தை ஆய்வு செய்தார் ஜெயலலிதா.மதுரை தத்தனேரி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிய பின் நிருபர்களிடம் ஜெயலலிதாபேசுகையில்,மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தோடு ஒப்பிடுகையில் பிரதமர் அறிவித்துள்ள ரூ. 500 கோடி என்பது போதவே போதாது.நாங்கள் ரூ. 3,000 கோடி உடனடி நிவாரண உதவி கேட்டோம். ஆனால், ரூ. 500 கோடி மட்டுமே தந்துள்ளார்கள்.
மத்திய அரசு அனுப்பும் இரண்டாவது குழு நாளை தமிழகம் வந்து சேதத்தை ஆய்விட உள்ளது.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு குடும்பத்துக்கு தலா ரூ. 1,000மும், 10 கிலோ அரிசியும், ஒரு லிட்டர்மண்ணெண்ணெயும், ஒரு சேலையும், ஒரு வேட்டியும் வழங்கப்படும்.
தண்ணீர் வடிந்த பின் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டு, உரிய நிவாரணம் அளிக்கப்படும். வீடுகளைஇழந்தவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்படும்.
தமிழகத்துக்கு கூடுதலாக அரிசியும் மண்ணெண்ணெயும் ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என்றார் ஜெயலலிதா.
பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மத்திய அரசின் உதவி வரும் வரை காத்திருக்காமல் மக்களுக்கு இந்த உதவித் திட்டத்தை நான் அறிவித்துள்ளேன். பயிர்களுக்குஏற்பட்ட சேதம் குறித்து ஆய்விட மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். விரைவில் அதற்குரிய நிவாரணமும்வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications