தமிழக வெள்ளச் சாவுகள்: நாடாளுமன்றம் அஞ்சலி
டெல்லி:
தமிழகத்தில் பெய்த தொடர் மழையிலும் வெள்ளத்தில் இரு பஸ்கள் அடித்துச் செல்லப்பட்டதிலும் பலியான 273 பேருக்கு (இதுஅரசு கணக்கு) லோக்சபாவில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இன்று லோக்சபா கூடியதும் பேசிய அவைத் தலைவர் சோம்நாத் சேட்டர்ஜி,
தமிழகத்தில் 273 பேர் தொடர் மழைக்கு பலியாகியுள்ளனர். இதில் 2 பஸ்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியதில் 123 பேர்இறந்துள்ளனர். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு இந்த அவை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும்தமிழக மக்களின் துக்கத்திலும் இந்த அவை பங்கேற்கிறது என்றார்.
இதற்கிடையே ராஜ்ய சபாவில் தென் மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகியபாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உடனடியாக வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி வலியுறுத்தினர்.
ராஜ்ய சபாவில் கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் பி.ஜி. நாராயணன் எழுந்து, தமிழகத்துக்கு உடனடியாக ரூ. 3000கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தமிழகத்துக்கு உடனடியாக நிதியுதவி வழங்கப்படும் என்றார்.
இதே போல பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்களும் மழையால் பாதிக்கப்பட்ட தங்களதுமாநிலங்களுக்கு நிவாரண நிதி கேட்டு வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications