தமிழகத்துக்கு ரூ. 500 கோடி உடனடி நிவாரண நிதி: பிரதமர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முன் பணமாக உடனடியாக ரூ. 500 கோடியை வழங்கி பிரதமர் மன்மோகன் சிங்உத்தரவிட்டுள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தும் மத்தியக் குழுவினரின் பரிந்துரைப்படி கூடுதல் நிதிஒதுக்கப்படும் என்றும், உடனடி நிவாரணப் பணிகளுக்காக இந்த ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு மத்தியக் குழு தனது அறிக்கையை சமர்பித்துவிட்டது. இந் நிலையில் இரண்டாவது குழுவும் தமிழகத்துக்குவரவுள்ளது.

தமிழகத்துக்கு முன் பணமாக உடனே ரூ. 3,000 கோடி வழங்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுயிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல தமிழகத்துக்கு அதிகமாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என கருணாநிதிதலைமையில் நடந்த திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஜெவுடன் பிரதமர் பேச்சு:

இந் நிலையில் நேற்றிரவு தமிழக வெள்ள நிலைமை குறித்து ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர்மன்மோகன் சிங் விசாரித்தார்.

அப்போது, தமிழகத்துக்கு அனைத்து வகைகளிலும் மத்திய அரசு உதவும் என பிரதமர் உறுதியளித்தார். அதே போல மீட்புநடவடிக்கைகளை தனது அரசு மிக வேகமாக மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குஇடம் பெயர்க்கப்பட்டு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

மேலும் தேசிய அவசரகால நிதியில் இருந்து உடனடியாக ரூ. 3,000 கோடியை மாநில அரசுக்கு முன் பணமாகத் தர வேண்டும் என்றதனது கோரிக்கையை ஜெயலலிதா மீண்டும் பிரதமரிடம் வலியுறுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+