For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசம்பர் 4ல் திருவண்ணாமலை கார்த்திகை விழா தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா வரும் 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது அவர்களின் தான் என்றஅகங்காரத்தை போக்க சிவபெருமான் அக்னி மலையாக அடிமுடி காணா பரம்பொருளாக காட்சியளித்தார்.

அவ்வாறு சிவபெருமான் காட்சியளித்த இடம் திருவண்ணாமலையாகும். மேலும் இங்கு மலையே சிவபெருமானாகவணங்கபெறுகிறது.

எனவே விஷ்ணு, பிரம்மா வேண்டுகோளுக்கிணங்க கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் மலை உச்சியில் என்னைஒளிவடிவமாக காணலாம் என்று சிவபெருமான் அருளினார்.

கார்த்திகை தீபத்தின் பிறப்பிடமான திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் தீபத்திருவிழாகொண்டாடப்படுகிறது. 10வது நாள் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் அண்ணாமலை தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம்மகாதீபமாக 11 நாட்கள் எரியும்.

இந்த தீபத்தை காண நாடு முழுவதும் இருந்து லட்டசக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவது வழக்கம். இந்தஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குறது.

இதையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து இயக்கப்படஉள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X