சுய நிதி கல்லூரிகள்: அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு
சென்னை:
இந்தியா முழுவதும் மருத்துவம் மற்றும் பொறியில் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் கீழ் உள்ள இடங்களுக்குமாணவர்களைச் சேர்க்க தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த அகில இந்திய மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிசங்கம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி சங்கத்தின் தலைவர் டி.டி. நாயுடு கூறியதாவது:இந்த தேர்வு முறையை உச்ச நீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் அடங்கிய குழு அங்கீகரித்துள்ளது. அதை தொடர்ந்து இந்த பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வை 2006ம் ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த தேர்வை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்படதிறமையானவர்கள் பலர் மேற்பார்வையிடுவார்கள். இந்த தேர்வு முறையால் மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுதிபணத்தை வீணடிக்க தேவையில்லை.
ஒரு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஒரு முறை நுழைவுத் தேர்வு எழுதி இந்தியாவில் எந்த கல்லூரியில் வேண்டுமானாலும்சேர்ந்து படிக்கலாம்.
இத் தேர்வை இந்தியாவில் 200 மையங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், சிபிஐஅதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள் ஆகியோர் தேர்வை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.