For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமருடன் வைகோ சந்திப்பு: ரூ. 3,000 கோடி நிதி கோரினார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கேட்ட ரூ. 3,000 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று பிரதமரை வைகோகேட்டுக் கொண்டார். வெள்ள நிவாரணத்துக்குத் தேவையான தொகையை மத்திய அரசு வழங்கும் என்று வைகோவிடம் பிரதமர்மன்மோகன் சிங் உறுதி அளித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில்ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் வைகோ தெரிவித்தார். பின்னர் கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம்வைகோ கொடுத்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழக மக்களின் அவல நிலையை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். இந்த பேரழிவு லட்சக்கணக்கானவர்களை வீடு இழக்கச் செய்து விட்டது. மீட்புப் பணிகளும் திருப்திகராகநடக்கவில்லை.

போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டதால் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கான விளைநிலங்கள், விவசாயத்துக்கு தகுதியற்றதாக ஆகிவிட்டது. எனவே, தமிழக மக்கள் இப்போது மத்திய, மாநில அரசுகளின்உதவிக்காக ஏங்குகிறார்கள்.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடு இழந்து தவிக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர்உயிரிழந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் நேரில் சென்று பார்த்த போது சாலைகள், தண்டவாளங்கள்துண்டிக்கப்பட்டு இருந்தன. இது சேதம் தேசிய பேரழிவாகும்.

மத்திய அரசு உடனடி நிவாரண பணிகளுக்காக ரூ. 500 கோடி ரூபாய் அளித்ததற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். தமிழக அரசுகேட்பது போல் தற்போது அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே, தமிழக அரசு கேட்டுக் கொண்ட நிதியை தேசியப் பேரழிவுநிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கான நிவாரணத்துக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தொகையைமத்திய அரசு வழங்க வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X