For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீராணம் நீரில் கால்நடை பிணங்கள்: சென்னைக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வீராணம் ஏரி மிக அதிகமாக மாசுபட்டுள்ளது. எனவேஏரியிலிருந்து சென்னைக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையாலும் காவிரியில் இருந்து கொள்ளிடக் கால்வாயில் வரலாறு காணாத அளவுக்கு திறந்துவிடப்பட்ட வெள்ள நீராலும் வீராணம் ஏரி நிரம்பியது. இதையடுத்து ஏரியை பாதுகாக்கும் பொருட்டு 46.8 அடிக்கு மேல் உள்ளதண்ணீர் வெள்ளியங்கால் ஓடை மற்றும் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டது.

கொள்ளிடக் கால்வாய் வெள்ள நீரில் ஏராளமான கால்நடைகள் மற்றும் பிணங்கள் அடித்து வரப்பட்டதாலும், பல இடங்களில்கழிவுநீர் கால்வாய் மற்றும் சாக்கடை நீர் கலந்ததாலும் வீராணம் ஏரிக்கரையோர கிராமங்களில் குடிநீர் மாசுபட்டுள்ளது. நிலத்தடிநீரும் மஞ்சள் நிறத்தில் கலங்களாக காணப்படுகிறது.

வீராணம் நீரில் ஆடு, மாடுகளின் பிணங்கள் இருப்பதாலும் இதனால் தண்ணீரும் படு மோசமாக மாசடைந்துள்ளதாலும் அந்தஏரியிலிருந்து சென்னைக்கு சப்ளை செய்யப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X