For Daily Alerts
Just In
ஆஸ்திரேலியா: இந்தியாவின் டாக்டர் டெத்
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் 80க்கும் மேற்பட்ட நோயாளிகளின் சாவுக்குக் காரணமாக இருந்த இந்திய டாக்டர் மீது கொலை, தாக்குதல்,கவனமின்மை, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளன.
டாக்டர் டெத் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள ஜெயந்த் படேல் குயீன்ஸ்லாந்த் மருத்துவமனையில் பணியாற்றுகையில் இவரிடம்சிகிச்சை பெற்ற 13 பேர் இறந்தனர். இதே போல வேறு மருத்துவமனைகளில் பணியாற்றியபோதும் பலரது உயிரை இவர் காலிசெய்துள்ளார்.இவரால் இறந்த நோயாளிகளின் எண்ணிக்கை 80தைத் தாண்டும் என்று தெரியவந்துள்ளது.
இவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதையடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து தப்பி அமெரிக்காவுக்கு ஓடிவிட்டார்.
இவர் மீது விசாரணை நடத்திய குழு கொடுத்த அறிக்கை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,ஜெயந்த் படேலை பணிக்கு அமர்த்திய 2 மருத்துவமனைகள் மீதும் வழக்குத் தொடர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, November 30, 2005, 5:30 [IST]