கூடுதல் மண்ணெண்ணெய்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்துக்கு கூடுதலாக 43,200 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக இந்த மண்ணெண்ணெயை கோருவதாக அவர் கூறியுள்ளார்.

மன்மோகன் சிங்குக்கு அவர் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில்,

தமிழகத்துக்கு டிசம்பர் மாதத்துக்கு 59,839 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக விறகு, சாணம் (விராட்டி) உள்ளிட்ட காய்ந்த எரிபொருட்களைப்பயன்படுத்த இயலாத நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரே மாற்று எரிபொருள் மண்ணெண்ணெய்தான்.

சமையலுக்கும், மின் வசதிக்கும் மண்ணெண்ணையையே மக்கள் நம்பியுள்ளனர். சமையல் கேசுக்கு வேறு தட்டுப்பாடுநிலவுவதால் மண்ணெண்ணெய்யின் தேவை பல மடங்காகிவிட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மண்ணெண்ணெய் கிடைக்கச் செய்ய வேண்டிய நிலையில் அரசு உள்ளது. தமிழகத்தில்உள்ள அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் கூடுதலாக தலா 3 லிட்டர் வழங்க வேண்டுமானால் எங்களுக்கு இந்த மாதம் 43,200கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் கூடுதலாகத் தேவை.

மாநிலத்தில் உள்ள அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்க தமிழகத்துக்கு 1 லட்சம் கிலோ லிட்டர் தேவை.இது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கைகளை எல்லாம் நிராகரித்துவிட்டு டிசம்பர் மாதத்துக்கு 59,839 கிலோ லிட்டர் தான்ஒதுக்கியுள்ளீர்கள்.

இதனால் ஒதுக்கப்பட்ட மண்ணெண்ணெயோடு கூடுதலாக 43,200 கிலோ லிட்டர் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+