திருச்சியில் கலாம்: தமிழகத்தில் 3 நாள் பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜனாதிபதி அப்துல் கலாம் தமிழகத்தில் 3 நாள் சுற்றுப் பயணமாக இன்று இரவு திருச்சி வருகிறார்.

நாளை (வியாழக்கிழமை) காலை ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட சேதப் பகுதிகளைபார்வையிடுகிறார்.

அங்கிருந்து சென்னை வரும் அவர் ஐஐடி நிறுவன கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். பிறகு அங்கிருந்து வேலூர் அரியூர்திருமலைக் கோடி ஸ்ரீ நாராயணி சித்தபீட வளாகம் செல்கிறார். அங்கிருந்து சிஎம்சி மருத்துவமனைக்கு செல்லும் கலாம்ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையத்திற்காக அடிக்கல் நாட்டுகிறார்.

இதை தொடர்ந்து வேலூர் விஐடி நிகர் நிலை பல்கலைக்கழகத்திற்கு செல்லும் ஜனாதிபதி ஊரக ஆய்வு மேம்பாட்டு மையத்தைதுவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். அதை தொடர்ந்து அப்துல் கலாமுடன் அந்த பல்கலைக்கழக மாணவ மாணவிகள்கலந்துரையாடுகின்றனர்.

பின்னர் காஞ்சிபுரம் செல்லும் கலாம் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன விஞ்ஞானிகளுடன்கலந்துரையாடுகிறார்.

பிறகு ஸ்ரீ நாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பார்வையிடும் கலாம் அங்கிருந்து ஹெலிகாப்டரில்சென்னை வருகிறார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் லயோலா கல்லூயில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு சென்னை ராஜ்பவன் மாளிகை செல்கிறார்.

அங்கு அப்துல் கலாமை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்து வெள்ளச் சேதங்கள் குறித்து விளக்குகிறார். கலாமின் வருகையையொட்டிசென்னை, வேலூர், திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+