For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சம்மனுக்கு தடை வாங்கினார் குஷ்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Kushboo
குஷ்பு இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாலாஜாபேட்டை மாஜிஸ்திரேட் பிறப்பித்த சம்மன் உத்தரவுக்கு சென்னைஉயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதையடுத்து இன்று (30ம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து குஷ்புதப்பினார்.

தமிழகப் பெண்களின் கற்பு குறித்து கேவலமாகப் பேசிய குஷ்பு மீது பல்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள்போடப்பட்டுள்ளன.

கடந்த முறை மேட்டூர் நீதிமன்றத்தின் சம்மனை மதிக்காமல் தலைமறைவான குஷ்பு, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின்னர்ஆஜரானார். அப்போது அவர் மீது செருப்பு, தக்காளி, முட்டைகள் வீசப்பட்டன.

இந் நிலையில் இன்று வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என குஷ்புவுக்குஉத்தரவிடப்பட்டிருந்தது. இந் நிலையில் தான் நேரில் ஆஜரவாதற்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்குஷ்பு.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாசிலாமணி, வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து குஷ்புவுக்குவிலக்களித்தார். மேலும் அந்த நீதிமன்றத்தின் சம்மன் மீது இடைக்காலத் தடையும் விதித்தார்.

இதன்மூலம் தனக்கு எதிராக பல்வேறு மாவட்ட நீதிமன்றங்கள் பிறப்பித்த 15 சம்மன்களுக்கு குஷ்பு உயர் நீதிமன்றத்தில் தடைபெற்றுள்ளார்.

இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் நீதிமன்றம் வரும் 2ம் தேதி குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன்பிறப்பித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X