For Daily Alerts
Just In
தனியார் கல்லூரி இட ஒதுக்கீடு: தமிழக மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி:
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அளிக்கப்பட்டதீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடிசெய்யப்பட்டது.தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில், அரசு உதவி பெற்றாலும் பெறாவிட்டாலும் இந்தக் கல்லூரிகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதி அகர்வால், நீதிபதி அருண் குமார், நீதிபதி மாத்தூர், நீதிபதி தாக்கெர், நீதிபதிதருண் சாட்டர்ஜி, நீதிபதி பாலசுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்துஇன்று தீர்ப்பளித்தது.
தமிழக அரசின் மனுவை ஆய்வு செய்தோம். தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கிடையாது என்ற தீர்ப்பை மறுபரிசீலனைசெய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று கூறி அந்த மனுவை நீதிபதிகள் செய்து உத்தரவிட்டது.
Comments
Story first published: Wednesday, November 30, 2005, 5:30 [IST]