சீரியல் பார்க்க முடியாததால் பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
தன்னை டிவி சீரியல் பார்க்க விடாமல் தடுத்துவிட்டு, மகன் வேறு நிகழ்ச்சியைப் பார்த்ததால் எரிச்சலான தாயார் தீ வைத்துதற்கொலை செய்து கொண்டார்.
ராஜம்மாள் (65) என்ற அந்தப் பெண், டிவியில் சீரியல் பார்க்க முனைந்துள்ளார். ஆனால், அப்போது அவரது மகன்செளந்தரபாண்டியன் வேறு ஒரு சேனலில் வேறு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தார். தாயார் சேனலை மாற்றச் சொல்லியும்பாண்டியன் கேட்கவில்லை.இதனால் விரக்தி அடைந்த ராஜம்மாள் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக் காயங்களுடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டிவி சீரியலுக்காக உயிரை விட்டு இந்தப் பெண்ணுக்கு இரங்கல் செலுத்த வந்த உறவினர்கள் அனைவரும் அவரைத் திட்டித்தீர்த்துவிட்டுப் போயினர்.












Click it and Unblock the Notifications