வெள்ளம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மத்திய அரசு ரூ. 50,000
சிதம்பரம்:
![]() |
மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.எஸ். மிஸ்ரா தலைமையிலான குழுவினர் கடலூர் மாவட்டத்தில் வெள்ளச் சேதங்களைபார்வையிட்ட பின்பு நிருபர்களிடம் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் முதன் முறையாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதற்கும், தற்போதுபார்வையிட்டதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர்கள், பாலங்கள், சாலைகள் பெருத்த சேதமடைந்துள்ளன. ஏற்கனவே186 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது 22 மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளப் பெருக்கின் போது ஆறு, திசை மாறி ஓடி பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,000 மற்றும் இறந்தவர்குடும்பங்களுக்கு ரூ. 50,000 நிவாரண உதவி தரப்படும்.
நாங்கள் 2 அல்லது 3 நாட்கள் பார்வையிட்டு உண்மை நிலையை அறிய முடியாது. தமிழக அரசு அளித்துள்ள அடிப்படையில்ஆய்வு செய்து ஒரு வாரத்துக்குள் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வோம்.
ஆண்டுக்கு ஒரு முறை சம்பா பயிர் நடவு செய்யும் விவசாயிகளுக்கு 20 நாட்கள் தான் வேலை உள்ளது. மீதி நாட்களில்அவர்களுக்கு மாற்றுவேலை வழங்கப்படுமா என நிருபர்கள் கேட்டதற்கு, இது குறித்து மாநில அரசு அளிக்கும் அறிக்கையின்படிமாற்று வேலை தர மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.













Click it and Unblock the Notifications