For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் செல்போனில் ஏழுமலையான் தரிசனம்!

By Staff
Google Oneindia Tamil News

திருப்பதி:

இனி திருப்பதி எழுமலையானை செல்போனிலேயே தரிசனம் செய்யலாம். அதற்கான ஏற்பாட்டை திருப்பதி தேவஸ்தானம்செய்துள்ளது.

திருப்பதி எழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தேவஸ்தான நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் கட்டண சேவைகள் மற்றும் தங்கும் விடுதிக்கான முன்பதிவு வசதியை ஏற்படுத்திகொடுத்துள்ளது. தற்போது இண்டர்நெட், ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து கொள்ளவும், ஏழுமலையான் கோவிலில்நடைபெறும் சேவைகளை இண்டெர்நெட் மூலம் நேரடியாக பார்க்கவும் முடிகிறது.

தற்போது நாடு முழுவதிலும் செல்போன்கள் பெருகி விட்டதால் அவற்றிலும் ஏழுமலையான் சேவைகளை காட்ட தேவஸ்தானம்முடிவு செய்துள்ளது. திருப்பதி கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், சுப்ரபாதம் மற்றும் வீடியோ செல்போன்களில்விரும்பிய நேரத்தில் பக்தர்கள் பார்த்து தரிசிக்க முடியும்.

இதற்காக நாடு முழுவதிலும் உள்ள செல்போன் நிறுவனங்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்கள். இந்த சேவை அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கப்படலாம் என்று தெரிகிறது.

செல்போன் மூலம் திருப்பதி கோவில் கட்டண சேவைகள், தங்கும் விடுதி போன்றவற்றுக்கு முன்பதிவும் செய்து கொள்ளலாம்என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X