ஆந்திரா- சென்னை இடையே சனிக்கிழமை கரை கடக்கும் புயல்
சென்னை:
![]() |
அதே நேரத்தில் இந்தப் புயலால் தமிழகத்துக்கு ஏற்பட்ட அபாயம் நீங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் சென்னையிலிருந்து தென் கிழக்கே 400 கி.மீ. தொலைவில் இந்தப் புயல் சின்னம் நிலையாக நின்றுகொண்டுள்ளது. அது இப்போது மேலும் வலுவடைந்து மிக மெதுவாக ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி முன்னேறிவருகிறது.
இதனால் சென்னை- மசூலிப்பட்டிணத்துக்கு இடையே ஆந்திரக் கரையில் இந்தப் புயல் சனிக்கிழமை காலை கரையைக் கடக்கும்என்று தெரிகிறது. ஆனால், இன்று இரவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றும் கனமழையும் தொடங்கிவிடும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன் இயக்குனர் ரமணன் கூறுகையில், தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கிவிட்டாலும், சென்னை உள்ளிட்ட மூன்று வடமாவட்டங்களிலும் மிக பலத்த காற்றுடன் இன்று இரவு முதல் கன மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மாவட்ட கடலோரப்பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
கடலில் சீற்றம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
மற்ற மத்தியப் பகுதி மாவட்ட கடலோரப் பகுதிகளான கடலூர், நாகை, தஞ்சை ஆகியவற்றில் லேசான மழை பெய்யும். மணிக்கு50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
2001ம் ஆண்டுக்குப் பின் தமிழகத்தை புயல் ஏதும் தாக்கவில்லை. இருந்தாலும் நாம் கவனமாக இருப்பதே நல்லது. இந்த புயல்சின்னம் வலுவடைந்து, திசை மாறினால் தமிழகத்திலும் மோசமான விளைவுகள் நேரலாம் என்றார்.
இதற்கிடையே புயல் இப்போதுள்ள நிலையில் ஆந்திராவைத் தாக்கவுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளதால் அம் மாநிலம் புயலைச்சமாளிக்க தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நெல்லூர், கோதாவரி, பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, சித்தூர் மாவட்டங்கள்இந்தப் புயலைச் சமாளிக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்துள்ளன.
மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு இந்த மாவட்டங்களின் ரயில்வே அதிகாரிகளுக்கும்உத்தரவிடப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications