For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ள நிலவரம்: கலாமிடம் விளக்கினார் ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக மழை, வெள்ளச் சேதம் குறித்தும் மாநில அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்தும் குடியரசுத் தலைவர்அப்துல் கலாமை நேரில் சந்தித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்தார்.

சென்னை வந்துள்ள கலாமை, இன்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். அவருடன்தலைமைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

தமிழகத்தில், மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேத நிலவரம், தமிழக அரசின் நிவாரணப் பணிகள் ஆகியவை குறித்துகலாமிடம் ஜெயலலிதா விளக்கினார். பின்னர் மத்திய அரசிடம் கோரியுள்ள நிவாரண நிதி இன்னும் வந்து சேரவில்லைஎன்பதையும் அவர் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் 3 முறை ஏற்பட்ட மழை பாதிப்புகளை தமிழக அரசு திறம்பட சமாளித்து, நிவாரணப் பணிகளைமேற்கொண்டுள்ளதாக ஜெயலலிதாவிடம் கலாம் கூறினார்.

தமிழக அரசின் பணிகள், குறிப்பாக கடலூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் ககன்தீப்சிங் பேடி, டாக்டர்ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ள பணிகள் பாராட்டுக்குரியவை என்று கலாம் தெரிவித்தார்.

இச் சந்திப்பின்போது ஆளுனர் பர்னாலாவும் உடன் இருந்தார்.

அண்ணா பல்கலையில் கலாம்:

முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கலாம் உரையாற்றினார். அவர் கூறுகையில்,

சாப்ட்வேர் துறையையும் தாண்டி வேறு துறைகளிலும் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் கவனம்செலுத்த வேண்டும். குறிப்பாக ஹைட்ராலிக்ஸ், விவசாயப் பொறியியல், நீர் ஆதார மேம்பாடு குறித்த ஆராய்ச்சிகள், கல்விதீவிரமாக்கப்பட வேண்டும்.

இவை அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் திறன் படைத்த பாடப் பிரிவுகள் ஆகும். 2025ம் ஆண்டில் உலகில் 8பில்லியன் மக்கள் தொகை இருக்கும். அப்போது பெரும் அளவில் குடிநீர் பஞ்சம் உருவாகும். அதைச் சமாளிக்க குறைந்தசெலவில் கடல் நீரைக் குடிநீராக்குவது தான் ஒரே வழியாக இருக்கும். அதற்கான ஆய்வுகளை இப்போதே தொடங்க வேண்டும்.

அதே போல நாட்டின் முக்கிய கல்வி நிலையங்கள் அனைத்தும் அதிக டிரான்ஸ்மிசன் சக்தி வாய்ந்த பைபர் கேபிள்களால்இணைக்கப்பட்டு knowledge grid உருவாக்க வேண்டும் என்றார்.

மேலும், வரும் 2007ம் ஆண்டில் பல நாடுகள் இணைந்து இளைஞர்களுக்காக தனியாக ஒரு செயற்கைக் கோளை செலுத்தஉள்ளன. அவற்றின் மூலம் உலகம் முழுவதும் இளைஞர்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்றார்

இந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது தான் கலாம் ஜனாதிபதியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X