இந்தியா வருகிறார் ராஜபக்ஷே
டெல்லி:
இலங்கையின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மங்கள சமரவீரா, டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார்.
வெளியுறவுத்துறையில் இருந்து நட்வர் சிங் நீக்கப்பட்டதில் இருந்து அந்தத் துறையை மன்மோகன் சிங் தான் கவனித்துவருகிறார். இதனால் சமரவீரா, பிரதமரையும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமதையும் சந்தித்தார்.அப்போது விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்வதில் அதிபர் ராஜபக்ஷே திட்டவட்டமாக இருப்பதாகபிரதமரிடம் சமரவீரா தெரிவித்தார்.
மேலும் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு மீண்டும் வருமாறு புலிகளுக்கு அரசு அழைப்புவிடுத்துள்ளதாகவும், இந்த விஷயத்தில் திறந்த மனதுடன் செயல்பட ராஜபக்ஷே தயாராக இருப்பதாகவும் சமரவீரா கூறினார்.
இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு காண்பதையே இந்தியா ஆதரிப்பதாகவும், இந்தமுயற்சிகளுக்கு முழு ஆதரவும் தருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இச் சந்திப்புக்குப் பின் இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றவகையில், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளையாத வகையில், ஜனநாயகரீதியில், மனித உரிமைகள் மதிக்கப்படும்வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.
இலங்கையின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு எந்த சிக்கலும் ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை என்றுகூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா வருமாறு இலங்கை அதிபருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications