தமிழகம் வராதது ஏன்?: பிரதமர் விளக்கம்
டெல்லி:
வெள்ளம் பாதித்த தமிழகத்துக்கு வராதது ஏன் என்ற கம்யூனிஸ்ட் எம்பிகளின் கேள்விக்கு பிரதமர் மன்மோகன் சிங்பதிலளித்துள்ளார்.
வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் பார்வையிட தமிழகம் வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மார்க்சிஸ்ட்மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் எம்பிகள் கோரிக்கை விடுத்தனர்.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் எம்பிகள் சீதாராம் யெச்சூரி, பி.மோகன், பெல்லார்மின், இந்திய கம்யூனிஸ்ட் எம்பி அப்பாதுரைஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அப்போது வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் காரணமாக உடனடியாக தமிழகத்துக்கு வந்து வெள்ள சேதத்தை நேரில்பார்வையிட நேரம் கிடைக்கவில்லை, ஆனால் தமிகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் தெரிவித்தார்.
சென்னை உள்பட தமிழகத்தின் 22 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, கடலூர் மாவட்டம்முழுமையாக நீரில் மூழ்கிக் கிடக்கிறது. இதை ஒரு தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் அளித்த மனுவில்கம்யூனிஸ்ட் எம்பிகள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications