தூத்துக்குடி, சென்னையில் கடல் ஆக்ரோஷம்: ஊருக்குள் புகுந்த நீர் !

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடி, சென்னை கடல் பகுதியில் அலைகள் மிக ஆக்ரோஷமாக உள்ளன. கடலின் மட்டம் திடீரென உயர்ந்து, நீர் இந்தநகர்களின் உட் பகுதிகளுக்குள் நுழைந்துள்ளது.

சுனாமி தாக்குதலுக்குப் பின் தூத்துக்குடி பகுதியில் கடல் உள்வாங்குவதும் வெளிவாங்குவதுமாக அவ்வப்போது பீதியூட்டிவருகிறது.

இந் நிலையில் நேற்று காலை முதல் கடலில் சீற்றம் அதிகமாக இருந்தது. நேற்று இரவில் கடற்கரை சாலையில் உள்ள ரோச்பூங்காவுக்குள் 150 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் புகுந்தது.

சிறுவர் பூங்காவுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடலின் மட்டம் உயர்ந்து காணப்படுவதாக திரேஸ்புரம், இனிகோ நகர் உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்தவர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.

அதே போல சென்னையில் எண்ணூர்-திருவெற்றியூர் பகுதியில் கடல் அலைகள் மீனவர்களின் வீடுகளுக்குள் புகுந்தது. இப்பகுதியில் 200 மீட்டர் அளவுக்கு கடல் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது.

அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி அருகே முழங்கால் வரை தண்ணீர் தேங்கும் அளவுக்கு கடல் வெளிவாங்கியது. அதே போலஐஸ் ஹவுஸ் அருகே கடற்கரையில் உள்ள உட்புற சாலை அலைகளால் தண்ணீரில் மூழ்கிவிட்டது.

பெசன்ட் நகர், பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம், ஆகிய பகுதிகளிலும் அலைகள் கடலைத் தாண்டி மக்கள் நடமாடும் பகுதிவரை எட்டி வருகின்றன. மெரீனா கடற்கரையில் மணலில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது.

குமரியில் உள் வாங்கிய கடல்:

இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் கடல் உள் வாங்கி பீதியைக் கிளப்பியுள்ளது. குமரி மாவட்டத்தில்பல இடங்களில் கடல் உள் வாங்கி பாறைகள் வெளியில் தெரிகின்றன.

நேற்று அமாவாசை என்பதால் நிலவின் ஈர்ப்பு சக்தியால் கடலின் மட்டம் உயர்வதும், தாழ்வதும் சாதாரணமானது தான் எனஅதிகாரிகள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+