வலுவிழந்தது புயல்: 2 தினங்களுக்கு மழை நிற்காது
சென்னை:
வங்கக் கடலில் உருவான புயல் வலுவிழந்ததால் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கான புயல் அபாயம்நீங்கிவிட்டது. எனினும் வட மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக்கூடும் என்றுவானிலை அய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில்வங்கக் கடலில் தென்மேற்குப் பகுதியில் சென்னைக்கு கிழக்கே நிலை கொண்டிருந்த இந்தப் புயல் சின்னம் இப்போது காற்றழுத்தத்தாழ்வு நிலையாக மாறியுள்ளது மேற்கு மத்தியப் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதனால் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் நிம்மதியடைந்துள்ளன.
எனினும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திராவில் நெல்லூர், பிரகாசம், குண்டூர் ஆகியமாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றழுத்தம் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications