பெங்களூர்: மதுரை குடும்பம் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் கடன் தொல்லை காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் தனது 3 குழந்தைகளை கொன்றுவிட்டுதானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாரி கிருஷ்ணன் (வயது 42) என்பவர் குடும்பத்தோடு பெங்களூர் ராமமூர்த்தி நகரில் வசித்து வருகிறார். இவர் மதுரையைசேர்ந்தவர். நிறைய இடங்களில் இவர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நிலையில் இவர் கடன்களை திருப்பி தரமுடியாத சூழ்நிலைக்கு வந்துவிட்டார்.
இதனால் விரக்தி அடைந்த பாரி கிருஷ்ணன் தனது மனைவி மற்றும் எட்டு வயதான 2வது மகளையும் கொன்றுள்ளார். பிறகுதனது 10 வயது நிரம்பிய முதல் மகளையும், 5 வயதான மகனையும் தூக்கில் மாட்டி சாகடித்துள்ளார். இதை தொடர்ந்து அவரும்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications