ஜனவரி முதல் என்ஆர்ஐகளுக்கு இரட்டை குடியுரிமை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சா வழியினருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டம் வரும் ஜனவரி 7ம் தேதி முதல்அமலுக்கு வருகிறது.பாகிஸ்தான், வங்காளதேசம் நீங்கலாக பிற வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.
1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்கு பின் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று குடியேறியவர்களுக்கும் அவர்களதுசந்ததியினருக்கும் இந்க இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்.
இந்திய குடியுரிமைக்கான அடையாள அட்டை அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி முதல் வழங்கப்படும் என மத்திய உள்துறைஇணைச் செயலர் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
இந்தக் குடியுரிமை பெறுபவர்கள் இந்தியாவில் நிலம் வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications