For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிசம்பர் 6: சபரி மலையில் தீவிர பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

சபரிமலை:

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாதலால் அசம்பாவிதங்கள் நடைபெறமால் தடுக்க நாடு முழுவதும் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கூட்டம் அதிமாக கூடும் சபரிமலை கோவிலிலும் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதியில்முதல் 3 நாட்கள் சபரிமலை சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பதினெட்டாம் படி நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளமெட்டல் டிடெக்டர் மூலமாகத்தான் செல்ல வேண்டும் என்று பாதுகாப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருமுடி, மற்றும் பூஜை சமான்கள் சுமந்து வரும் பக்தர்களை பம்பாவிலிருந்து, சன்னிதானம் வரை எந்த இடத்திலும்தேவைப்பட்டால் சோதனைக்கு உட்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல பக்தர்கள் ஆயுதங்கள் எதுவும் கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மண்டலபூஜையையொட்டி சபரிமலையில் கூட்டம் நிரம்பி வழிய தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்மழை பெய்வதால், தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் குறைந்த அளவிலேயேஉள்ளனர். ஆனால் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிமாக பக்தர்கள் வருகின்றனர் என்று தேவஸ்தான தகவல்கள்தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X