சாலைகளில் வெள்ளம்: தமிழகத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட சென்னை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நீரால் சூழப்பட்டுள்ள சென்னையை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வெள்ளம் ஓடுவதால் தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து சென்னை மாநகர் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரி உடைந்ததால் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் முக்கிய பாலமும் அதையொட்டிய சாலையும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பெரும் பள்ளம்உருவாகிவிட்டது.இதனால் சென்னைக்கும் பெங்களூர், புனே, மும்பைக்கு இடையிலான போக்குவரத்து முடங்கிவிட்டது.
அதே போல செங்குன்றம் ஏரி உடைந்து சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் வெள்ளம் ஓடுகிறது. இதன் காரணமாக,சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கான போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போல புழல் ஏரி நிரம்பி அந்த நீர் சாலையை மூடிவிட்டதால் சென்னை- திருப்பதிக்கு இடையிலான போக்குவரத்தும்பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை மற்ற நகர்களில் இருந்து முழுவதுமாக சாலை மார்க்கத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications