தமிழகத்தை நெருங்கும் அடுத்த புயல் பனோஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Satellite image
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் தமிழகக் கடலோரத்தை நோக்கி நகர்ந்து வர ஆரம்பித்துள்ளது.

2 தினங்களுக்கு முன் சுமார் 2,000 கி.மீ. தொலைவில் அந்தமான் அருகே உருவாகிய இந்த மேகக் கூட்டங்கள் திரண்டுகாற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற ஆரம்பித்துள்ளது.

ஏகப்பட்ட கார் மேகங்களுடன் ஒரே நாளில் 1,000 கி.மீ. வரை பயணித்து இப்போது தமிழகக் கடலோரத்தை நோக்கி வரஆரம்பித்துள்ளது இந்த தாழ்வு மண்டலம்.

பிற்பகல் நிலவரப்படி இந்த காற்றழுத் தாழ்வு மண்டலம் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து 1,000 கி.மீ. தொலைவில் உள்ளது.இது அடுத்த இரு நாட்களில் தமிழகத்தை அடைந்துவிடும் என்று எத்ரிபார்க்கப்படுகிறது.

இதனால் மீண்டும் தமிழகத்திற்கு கன மழை அபாயம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுமாஎன்பதை இது 500 கி.மீ. தொலைவை அடைந்த பின்னரே சொல்ல முடியும்.

வங்கக் கடலில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் புயலுக்கு பனோஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பலத்த மேகங்களுடன் இந்த காற்றழுத்த மண்டலம் நெருங்குவதால் புயல் தாக்காவிட்டாலும் கூட தமிழகம் முழுவதும் கன மழைகண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இது சென்னையை நெருங்கி விடும் எனவும்தெரிகிறது.

இந்தப் புதிய புயல் சின்னத்தால் 2 நாள் இடைவெளிக்குப் பின்னர் புதன், வியாழன் வாக்கில் மீண்டும் ஒரு பேய் மழைசென்னையை சீரழிக்கும் என்ற அச்சத்தில் சென்னை மக்கள் ஆழ்ந்துள்ளனர்.

இந்த மழை மேகங்கள் கலைந்து திசை மாறி சென்று விட்டால் சென்னைக்கு பேய் மழை வாய்ப்பு குறையலாம். அதே நேரத்தில்புயல் சின்னத்தின் போக்கை வானிலை ஆராய்ச்சி நிலையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+