சென்னை, காஞ்சியில் வெள்ளத்துக்கு 20 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த சில நாட்களாகப் பெய் மழை, வெள்ளத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இதுவரை 20 பேர்பலியாகிவிட்டனர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த சங்கர், தியாகு ஆகியோர் அப் பகுதியில் கழுத்தளவு தண்ணீரில் நடந்து சென்றபோது அவர்களைவெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. இவர்களது உடல்கள் தேடப்பட்டு வருகின்றன.

அதே போல சின்ன போரூரைச் சேர்ந்த அருண் என்பவர் தனது பகுதியை சுற்றி வளைத்த ஏரி நீரை தெர்மகோல் போம் மூலம்கடக்க முயன்றார். அப்போது அவர் கவிழ்ந்து தண்ணீரில் விழுந்து, மூழ்கி பலியானார்.

மாங்காடு அருகே ரகு என்ற வாலிபர் கண்மாய்க் கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த வெள்ள நீர்அவரை அடித்துச் சென்றது.

போரூர் கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீனா என்ற 7ம் வகுப்பு மாணவியும் அந்தப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில்மூழ்கிப் பலியானார். கந்தன்வாடி அருகே ஒரு வாலிபரும், பள்ளிக்கரணை அருகே 2 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

கே.கே.நகர் பகுதியில் தண்ணீரில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார். பாலவாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்ற இளைஞர்ஒருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது உடல் இன்னும் கிடைக்கவில்லை.

அதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையில் வீடு இடிந்து 3 பேர் இறந்தனர். முகையூர் பகுதியில் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு சிறுமி பலியானாள். மணப்பாக்கம் கால்வாயில் விழுந்து ஒருவரும் கிளியனூர் ஏரியில் விழுந்து ஒரு சிறுவனும்பலியாயினர்.

திருவள்ளூரில் மணவாள நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். அதே போலபேரம்பாக்கத்தில் ஒரு சிறுவனும் வெள்ளத்தில் மூழ்கினான். மேலும் சிப்காட்டைச் சேர்ந்த மனோகரன் என்பவரும் மேலும்இருவரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+