குஷ்பு: சிறுவனின் பெயரில் நீதிபதிக்கு மிரட்டல்
சென்னை:
![]() |
மாஜிஸ்திரேட் ஸ்ரீதரனின் மேட்டூர் இல்லத்துக்கு கடந்த 1ம் தேதி வந்த அந்தக் கடிதத்தில்,
குஷ்பு மீது வீண் பழியின் பேரில் பொய் புகாரைப் பெற்றுக் கொண்டு அவரை இழிவுபடுத்தும் வகையில் பிடிவாரண்ட்பிறப்பித்ததற்காக நாங்கள் தண்டனை கொடுக்க தீர்மானித்துள்ளோம்.
எனவே இன்று உங்கள் நீதிமன்றம், காவேரி கிராஸ் பாலம் ஆகிய இடங்களை சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்துதகர்க்கவுள்ளோம். முடிந்தால் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், வாழ்வா அல்லது சாவா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்றுகூறப்பட்டிருந்த.
கடிதத்தை எழுதியவன் தனது முகவரியாக: இர்பான், மாநகராட்சிப் பள்ளி அருகே, அமைந்தகரை, சென்னை-29 என்று பெயர்-முகவரியைக் குறிப்பிட்டிருந்தான்.
அந்தக் கடிதம் சென்னை மேற்கு மாம்பலம் தபால் நிலையத்தில் போஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கடிதத்தைஅனுப்பியவனை மடக்க க்யூ பிராஞ்ச் போலீசார் விசாரணையில் இறங்கினர்.
போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த குறிப்பிட்ட முகவரியில் இர்பான் என்ற பெயரில் 4 வயது சிறுவன் இருப்பதுதெரியவந்துள்ளது. அந்த முகவரியில் வசிக்கும் இப்ராகிம் என்பவரின் மகன் தான் இர்பான்.
சிறுவனின் பெயரில் கடிதம் எழுதியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இப்ராகிமுக்கு வேண்டாதவர்கள்யாரோ தான் இக் கடிதத்தை எழுதியதாகத் தெரிகிறது.
களமிறங்கும் விஎச்பி:
இதற்கிடையே குஷ்புவுக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் களத்தில் குதிக்கிறது.
அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக விஎச்பியின் மும்பை தலைவரும், அந்த அமைப்பின் உயர்மட்டக் கவுன்சிலின் உறுப்பினரான ஆனந்த் சங்கர் பாண்டியா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருமணத்துக்கு முன்பே பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்ற குஷ்புவின் பேச்சு இந்துக் கலாச்சாரத்தின்ஆணி வேரையே தாக்குவதாக உள்ளது.
எல்லா மதங்களும் திருமணத்துக்கு முந்தைய செக்ஸை எதிர்க்கின்றன. ஓபன் செக்ஸ் என்ற பெயரில் இயங்கும் மேற்கத்தியக்கலாச்சாரம் அதற்கான பலனை தேவையற்ற கர்ப்பம், பால்வினை நோய், எய்ட்ஸ் மூலம் அனுபவித்து வருகிறது.
முற்போக்கு என்ற பெயரில் அபத்தம் பேசியிருக்கும் குஷ்புவுக்கும் அவரைப் போன்ற கருத்தை ஆதரிப்பவர்களுக்கும்தண்டனை வழங்கப்பட வேண்டும்.
குஷ்புவை எதிர்த்து விஸ்வ இந்து பரிஷத் நாடு முழுவதும் போராட்டத்தில் குதிக்கும் என்று கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications