For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது

By Staff
Google Oneindia Tamil News

பரமத்திவேலூர்:

லஞ்சம் வாங்கியதாக பரமத்திவேலூர் டிஎஸ்பி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அருகே உள்ள செஞ்சுனையான் பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகம்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கும் நில பிரச்சினை இருந்தது. இது குறித்து பரமத்திவேலூரில் சண்முகம் புகார் செய்தார்.ஆனால் அவரது நிலப்பிரச்சினை குறித்து போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவேபரமத்திவேலூர் டிஎஸ்பி தினகரனை சண்முகம் சென்று பார்த்தார்.

அப்போது டிஎஸ்பி தினகரன் நிலப்பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறினாராம். ஆனால் அதற்கு ரூ. 15,000 தனக்கு லஞ்சமாகதரவேண்டும் என்று கூறியுள்ளார். எனவே சண்முகம் முதல் தவணையாக ரூ.10,000 டிஎஸ்பியிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகுமீதீ ரூ. 5,000 விரைவில் தந்து விடுவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் டிஎஸ்பி லஞ்சம் கேட்ட விவரத்தை அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் சண்முகம் கூறியுள்ளார்.அப்போது டிஎஸ்பியை கையும், களவுமாக பிடிப்பது என்று முடிவு செய்தனர்.

இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு வழக்கறிஞர் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. நேற்று இரவு பரம்த்திவேலூரில்உள்ள ஜப்பான் பியூட்டி கடையில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பிகள் பன்னீர்செல்வம், பெரியசாமி மற்றும் போலீசார் மற்றும் போலீசார்மறைந்து இருந்தனர்.

அப்போது லஞ்ச பணம் ரூ.5,000த்தை வந்து பெற்றுக் கொள்ளும்படி விவசாயி சண்முகம் டிஎஸ்பி தினகரனுக்கு தொலைபேசிமூலம் தகவல் கொடுத்தார். தனக்கு பொறி வைக்கப்பட்டிருப்பதை அறியாத டிஎஸ்பி தினகரன் அந்த அடைக்கு வந்து விவசாயிசண்முகத்திடம் பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தினகரனை கைது செய்தது குறித்து டிஜிபிக்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்கிருஷ்ணபிள்ளை அறிக்கை சமர்ப்பித்தார். எனவே டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X