For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வுடன் சிவராஜ் பாட்டீல் ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

திங்கள்கிழமை இரவு 8.10 மணியளவில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், முதல்வர் ஜெயலலிதாவைத் தொலைபேசியில்தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தமிழக வெள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார். 4வது முறையாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரித்தறிந்தார்.

அவருக்கு வெள்ளச் சேதம் குறித்து ஜெயலலிதா எடுத்துரைத்தார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு போர்க்காலஅடிப்படையில் செயல்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதை அமைச்சர் பாராட்டினார்.

இந்த சமயத்தில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ. 13,685 கோடி நதி உதவி, 43,200 கிலோ லிட்டர்மண்ணெண்ணை உடனடியாக வழங்கக் கோரி மனு அனுப்பியிருப்பது குறித்து ஜெயலலிதா நினைவுபடுத்தினார்.

அதற்கு சிவராஜ் பாட்டீல், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பரிவான கோரிக்கைகள் விரைவாக பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும், தமிழக அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் பாட்டீல்உறுதியளித்தார் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X