ஜெயலலிதா மீது கருணாநிதி பாய்ச்சல்
சென்னை:
கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றுப் பாலம் இடிந்தது தொடர்பாக வேண்டும் என்றே முதல்வர் ஜெயலலிதா தன் மீது விசாரணைக்கமிஷன் அமைக்கப் போவதாக மிரட்டியுள்ளார் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றின் மீது கடந்த திமுக ஆட்சியின் போது மேம்பாலம் கட்டப்பட்டது. கரூர் நகரபோக்குவரத்துக்கு உயிர் நாடியாக விளங்கி வரும் இந்தப் பாலத்தின் ஒரு பகுதி, கடந்த மழை வெள்ளத்தின்போது இடிந்தது.இதனால் இப்பாலத்தின் வழியாக போக்குவரத்து நடைபெறுவது பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை சமீபத்தில் நேரில்சென்று பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சிக்காலத்தின் போது பல கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம்இடிந்து விழுந்துள்ளதால், பாலம் முறைப்படி கட்டப்பட்டதா, இதில் ஊழல் ஏதும் நடந்ததா என்பது குறித்து விசாரணைக்கமிஷன் அமைத்து விசாரிக்கப்படும் என அறிவித்தார்.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று விடுத்துள்ள அறிக்கையில், மழை, வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து நான்பலமுறை செய்தியாளர்களிடம் பேசும்போது அரசின் பணிகளைக் குறை கூறாமல் அரசியல் நிர்வாகம் காத்தேன்.
ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ, என்னையும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும் கடுமையாக விமர்சித்துக் கருத்துக்களைத்தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அமராவதி ஆற்றுப் பாலத்தின் பெரும் பகுதி நொறுங்கி விட்டது,
எனவே இதில் ஊழல் நடந்ததா என்பது குறித்து ஆராய விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.உண்மையில் அந்தப் பாலம் அரசின் செலவில் கட்டப்படவில்லை. ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் தான்அப்பாலத்தைக் கட்டியது.
பாலம் பலவீனமடைந்த போதெல்லாம் அதைப் பராமரிக்க அந்தத் தனியார் நிறுவனம் முயன்றபோதெல்லாம், ஆட்சித் தலைவர்பராமரிப்புப் பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்துள்ளார். என் மீது விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்றஉள்நோக்கத்துடனேயே பாலத்தில் போக்குவரத்து மறுக்கப்பட்டு பாலம் மூடப்பட்டுள்ளது.
உண்மையில் உடைந்தது பாலமா அல்லது அரசால் மணல் கொட்டி அமைக்கப்பட்ட சாலையா என்பதை ஜெயலலிதா விளக்கவேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications