கிருஷ்ணசாமி மீது கொலை வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய தமிழகம் கட்சி ஆதரவாளர்களுக்கும், இந்த கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியவரின் ஆதரவாளர்களுக்கும்இடையே நடந்த கோஷ்டி தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி உள்பட 10 பேர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த திரிசூலத்தில் கல்குவாரிகள் நிறைய உள்ளன. கல்குவாரிளை நடத்துவதில் புதிய தமிழகம் கட்சியினருக்குஇடையே மோதல் இருந்து வந்தது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர் கரும்பசாமிக்கும் அந்தகட்சியில் இருந்து விலகி போட்டி கட்சி தொடங்கிய தங்கபாண்டியனுக்கும் கல்குவாரி நடத்துவதில் போட்டி ஏற்பட்டது.

இதனால் 6 மாதமாக அங்கு கல்குவாரி பணி நடக்கவில்லை. நேற்று முன்தினம் தங்பாண்டியன் பூஜை போட்டு கல்குவாரிவெட்டி எடுக்கும் பணியை தொடங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி கோஷ்டியினர் தகராறில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பல்லாவரம் போலீசார் கல்குவாரியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். கல் உடைக்க கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. அங்கு பணியில் ஈடுபட்டவர்களை போலீசார் வெளியேற்றினர்.

இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் 10 பேர் பயங்கர ஆயுதங்களுடன் திரிசூலம் ஊருக்குள் புகுந்துரகளையில் ஈடுபட்டுள்ளனர். தங்க பாண்டியனின் ஆதரவாளர்கள் வேளாங்கன்னி வீட்டை அடித்து நொறுக்கினார்கள். ராஜா,சுரேஷ் ஆகியோரை தாக்கினார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த மாடசாமி (வயது 38) என்பவர் ரவுடிகளை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்தவன்முறை கும்பல் மாடசாமியை சரமாரியாக வெட்டியது. அவர் உயிருக்கு பயந்து ஓடினார். அவரை ஓட ஓட விரட்டினார்கள்.மாடசாமி அங்குள்ள கோவிலுக்குள் தஞ்சம் புகுந்தார்.

ஆனாலும் அந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்தனர். அவர் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பலியானார். இந்த தகவல்கிடைத்ததும் தங்கபாண்டியன் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். கிருஷ்ணசாமியின் ஆதாவாளர்களை தாக்க திரிசூலம்ஊருக்குள் புகுந்தனர். கிருஷ்ணசாமி ஆதரவாளர்களின் வீடுகளை சூறையாடினார்கள்.

இந்த கோஷ்டி பூசலினால் பதட்டம் ஏற்பட்டது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே கொலைசெய்யப்பட்ட மாடசாமியின் உறவினர்கள் ஆவேசம் அடைந்தார்கள். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தூண்டுதலின்பேரில் தான் இந்த கொலை நடந்துள்ளதாக போலீசாரிடம் கூறினர்.

பிறகு மாடசாமி கொலை தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.கிருஷ்ணசாமியின் தூண்டுதலின் பேரில் கொலை நடந்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் கிருஷ்ணசாமியை 8வதுகுற்றவாளியாக சேர்த்தனர்.

இந்த கொலை தொடர்பாக சுடலை, வேம்புலி ஆகிய 2 பேரையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர். கொலைசெய்யப்பட்ட மாடசாமி புதிய தமிழகம் கட்சிக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சியின் தீவிர ஆதரவாளர். இவரது சொந்த ஊர்நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் என்பது தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+