For Daily Alerts
Just In
ஜெயேந்திரரிடம் ஆசி பெற்ற குட்டிசாமியார்
விழுப்புரம்:
விழுப்புரம் சங்கரமடத்தில் காஞ்சி ஜெயேந்திரரை சேலம் குட்டிசாமியார் சந்தித்து நலம் விசாரித்து ஆசி பெற்றார்.
சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்குவசதியாக காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விழுப்புரம் சங்கர மடத்தில்தங்கியுள்ளனர்.
இந்நிலையில் சேலம் குட்டிசாமியார் ஸ்ரீவித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள் விழுப்புரம் வந்து விழுப்புரம் சங்கரமடத்தில்தங்கியுள்ள ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்தார்.
அப்போது வரும் 18ம் தேதி சேலம் விஜயராகவபுரத்தில் நடைபெற உள்ள செஞ்சுலட்சுமி தாயார் நரசிம்ம சுவாமிதிருக்கல்யாணத்திற்காக ஆசி பெற்றார். பிறகு குட்டி சாமியார் சேலம் புறப்பட்டு சென்றார்.
Comments
Story first published: Tuesday, December 6, 2005, 5:30 [IST]