For Quick Alerts
For Daily Alerts
Just In
பாபர் மசூதியைக் கட்டக்கோரி தமுமுக ஆர்ப்பாட்டம்
சென்னை:
அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை அரசு திருப்பிக் கட்டக் கோரி தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில்தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் ழுவதும்போலீஸார் உச்ச கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து தமிழகமுஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை, கோவை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இன்று கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் மெமோரியல் ஹால் பகுதியிலும், வேலூரில் கோட்டை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்தின் போது இடிக்கப்பட்ட இடத்தில் பாபர் மசூதியை அரசு திருப்பிக் கட்ட வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளான பெண்களும், ஆண்களுமாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Comments
Story first published: Tuesday, December 6, 2005, 5:30 [IST]