வைகை அணையில் உபரிநீர் திறப்பு
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக வைகை அணையில் கிடுகிடுவென நீர்மட்டம் உயர்ந்தது. இதனால்வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக இருந்தது. இன்று காலை இது 68.7 அடியாக உயர்ந்தது. வைகைஅணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இந்த அணையில் 69 அடி வரை தான் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். 69அடியை நெருங்கிவிட்டால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்படும்.
69 அடியை எட்ட இன்னும் 3 புள்ளிகள் தான் தேவைப்படுகிறது. அனேகமாக இன்று இரவுக்குள் 69 அடியை நெருங்கிவிட்டால்3வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications