தமிழர்களும் இந்தியர்கள் தான்: ஜெ. சூடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெள்ள நிவாரண நிதி கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் குறைந்த அளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால்இந்த விஷயம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்று முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

சென்னைப் புறநகர்ப் பகுதிகளான பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கணி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களுக்குசென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும் சந்தித்த ஜெயலலிதா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் மறைமுகமாக அதிருப்திவெளியிட்டார்.

ஜெயலலிதா கூறுகையில், வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக மத்திய அரசுக்கு இதுவரை 3 அறிக்கைகளை தமிழக அரசுஅனுப்பியுள்ளது. அதில் மொத்தமாக ரூ. 13,682 கோடி நிதி, இரண்டரை லட்சம் டன் அரிசி, 43,200 கிலோ லிட்டர்மண்ணெண்ணை ஆகியவற்றை ஒதுக்கக் கோரியுள்ளோம்.

ஆனால் மத்திய அரசு இதுவரை ரூ. 500 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. வெள்ள நிவாரணம் தொடர்பாக தொலைபேசியில்என்னுடன் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பேசியபோதும், இந்த 3 அறிக்கைகள் குறித்து விளக்கினேன்.

மத்திய அரசிடமிருந்து மட்டுமே தமிழக அரசு நிவாரண நிதியைக் கோரியுள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து கோரவில்லை.தமிழகம், இந்தியாவில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் வசிப்பவர்களும் இந்தியர்கள்தான். எனவே நிவாரண உதவி தொடர்பாகதேவைப்பட்டால் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.

பள்ளிக்கரணையில், சதுப்பு நிலம் அதிகம் உள்ள பகுதியில்தான் அதிக அளவில் நீர் தேங்குகிறது. இதன் காரணமாகவேமடிப்பாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி, உள்ளகரம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகஅளவில் வெள்ள நீர் புகுந்துவிடுகிறது.

இந்தப் பகுதிகளுக்குள் நுழையும் நீர் அங்கிருந்துபக்கிங்காம் கால்வாய்க்கு சென்று விழுகிறது. பக்கிங்காம் கால்வாயிலிருந்துஇந்த நீர் கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் பக்கிங்காம் கால்வாய், இந்த அளவுக்கு அதிக நீரை கடலுக்கு கொண்டு செல்லமுடியாத காரணத்தால்தான் துரைப்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், பாலவாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்துசேதத்தை அதிகப்படுத்தியுள்ளது.

எனவே பக்கிங்காம் கால்வாயிலிருந்து கடலுக்கு நீரை நேரடியாக கொண்டு செல்ல ஒக்கியம் மடுவு என்ற இடத்திலிருந்துநேரடியாக ஒரு புதிய கால்வாயை அமைக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+