For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ணசாமியைக் கைது செய்யக் கோரி வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கொலை வழக்கில் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கைது செய்துவிசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரம் அருகே உள்ள திரிசூலம் கல் குவாரியில் வேலை பார்த்து வந்த மாடசாமி (நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர்) ஓரிரு தினங்களுக்கு முன்பு சிலரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

புதிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் தான் மாடசாமி கொலை செய்யப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், படுகொலைச் சம்பவம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் நேரடி உத்தரவின்பேரில் நடந்ததாகவும், சம்பவம் நடந்த போது அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 10 பேர் மீது பல்லாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் 8வது எதிரியாககிருஷ்ணசாமி சேர்க்கப்பட்டுள்ளார்.அவரைக் கைது செய்யக் கோரி திரிசூலம் பகுதியில் கல் குவாரி தொழிலாளர்கள்நூற்றுக்கணக்கானோர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மாடசாமியின் தம்பி சங்கிலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், டாக்டர் கிருஷ்ணசாமியின் நேரடி உத்தரவின் பேரில் தான் இந்தக் கொலை நடந்துள்ளது. முன் பகைகாரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது.

இக்கொலை வழக்கில் கிருஷ்ணசாமியை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். ஆனால் 8வது குற்றவாளியாக அவரைபோலீஸார் சேர்த்துள்ளனர். அப்படி இருந்தும் அவரை இன்னும் கைது செய்யவில்லை, விசாரணை நடத்தவில்லை. எனவேகிருஷ்ணசாமியை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்கோரப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X