உஷார் நிலையில் இலங்கை
கொழும்பு:
யாழ்பாணத்தில் நெல்லூர் அருகே கண்ணி வெடிக்கு 7 ராணுவத்தினர் பலியானதைத் தொடர்ந்து கொழும்பு உள்பட நாட்டின் பலபகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
இது போன்ற தாக்குதல்கள் கொழும்புவிலும் நடக்கலாம் என்று சந்தேகிப்பதாக ராணுவம் கூறியுள்ளது. இதற்கிடையேஇலங்கையில் கிழக்குப் பகுதியில் நடந்த பல்வேறு மோதல்களில் மேலும் 8 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.இதற்கு புலிகள் தான் காரணம் என ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகளும் இலங்கை அரசும் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என அமெரிக்காகோரியுள்ளது. அந் நாட்டு வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் ஆடம் எர்ரிலி கூறுகையில், ராணுவத்தினர்நடத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா கண்டிக்கிறது என்றார்.
இந் நிலையில் இலங்கயிைல் புதிய ராணுவத் தளபதியான சரத் பொன்சேகா நேற்று பலாலிக்கு வந்தார். சிறப்பு விமானத்தில்பலாலி ராணுவ தளத்துக்கு வந்த அவர் யாழ்பாணத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பார்வையிட்டார்.
முகமலை, கிலாலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட அவர், ராணுவத்தினருடன் ஆலோசனைநடத்தினார்.












Click it and Unblock the Notifications