For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆற்றுக்குள் தரையிறங்கிய என்.சி.சி. விமானம்

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

என்சிசிக்குச் சொந்தமான பயிற்சி விமானம் இன்று வேலூர் அருகே பாலாறு ஆற்றில் அவசரமாகத் தரையிறங்கியது. அதிலிருந்தமாணவியும் விமானியும் காயங்களுடன் உயிர் தப்பிவிட்டனர்.

தேசிய மாணவர் படைக்குச் சொந்தமான அந்த விமானம் பெங்களூரில் இருந்து சென்னை தாம்பரம் விமானப் படைத் தளத்துக்குவந்து கொண்டிருந்தது.

அதில் கல்லூரி மாணவியான நிவேதாவும், விங் கமாண்டரான விமானி ஒருவரும் இருந்தனர்.

வேலூரில் இருந்த 10 கி.மீ. தொலைவில் அப்துல்லாபுரம் என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதில் கோளாறுஏற்பட்டது. அதில், எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விமானத்தை செம்பாக்கம்- பாலாறு ஆற்றின் காய்ந்து கிடக்கும் மணல் வெளிப் பகுதியில் தரையிறக்க விமானிமுடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

அப்போது மரம் ஒன்றில் விமானம் மோதிவிட்டு மணல் வெளியில் தரையிறங்கியது.

இதில் விமானியும், விமானத்தில் பயணித்த மாணவி நிவேதாவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X