ராகிங்: பி.டெக் மாணவன் தற்கொலை
சென்னை:
சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர், ராகிங்கொடுமை காரணமாக, கல்லூரி விடுதியிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவன் நாவரசு, ராகிங் கொடுமையால்படுகொலை செய்யப்பட்டார்.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் கொடுமைகளைதீவிரமாக கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் இன்னும் கூட ராகிங் கொடுமைகள் நடந்து கொண்டுதான்உள்ளன.
அந்த வகையில் தற்போது சென்னை அருகே உள்ள காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டுபி.டெக் படித்து வந்த மாணவன் ஸ்ரீதரன் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். பொத்தேரியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இவரிடம், சீனியர்மாணவர்கள் சிலர் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. அவரை கேவலமாகவும் நடத்தியுள்ளது இந்தக் கும்பல். அமைதியானசுபாவம் கொண்ட ஸ்ரீதரன் இதனால் மன உளைச்சல் அடைந்தார்.
இந் நிலையில் தனது விடுதியில், அறையின் உட் கதவைப் பூட்டிக் கொண்டு ஸ்ரீதரன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்குஅனுப்பினர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் மாணவனின் உடல், அவரது பெற்றோரிடம் வழங்கப்பட்டது.
உடலை வாங்க மறுத்த மாணவனின் பெற்றோரும், உறவினர்களும், ராகிங் கொடுமையால்தான் எனது ஸ்ரீதரன் இறந்து விட்டான்.இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் பிணத்துடன்போராட்டம் நடத்தினர்.
ஆனால், ஸ்ரீதரன் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என்று கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காசு கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் கல்லூரியில் சேர்க்கும் கல்லூரிகளில் ஒன்று தான் இந்த காட்டாங்கொளத்தூர்எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி. ராகிங்கால் மாணவன் தற்கொலை செய்து கொண்டான் என்று தெரிந்தால் அடுத்த ஆண்டுமாணவர்களைச் சேர்க்க பெற்றோர் முன் வர மாட்டார்கள்.
இதனால் வசூல் போய்விடும் என்பதால், அந்த மாணவன் ராகிங்கால் தற்கொலை செய்யவில்லை என்று புருடா விடுகிறது. ராகிங்செய்தவர்களோடு, அதை கண்டுகொள்ளாமல் விட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் நியாயமாகஇருக்கும்.












Click it and Unblock the Notifications