தாமிரபரணியில் வெள்ளம்: மக்களுக்கு எச்சரிக்கை
நாகர்கோவில்:
தாமிரபரணி அணையில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி, கொள்ளிடம், அமராவதி, அடையாறு ஆகிய ஆறுகள் பொங்கிப் பெருகி பல்லாயிரக்கணக்கான மக்களை தத்தளிக்கவைத்த நிலையில் தற்போது நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மாவட்ட மக்களைபீதிக்குள்ளாக்கியுள்ளது.இந் நிலையில் அப் பகுதியில் பெய்து கொண்டிருக்கும் கன மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 550 கன அடி நீர்வந்து கொண்டிருக்கிறது. 305 கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 410 கனஅடி நீர் வருகிறது. 499 கன அடி நீர் வெளியேறுகிறது.
பேச்சிப்பாறை அணையின் உச்சநீர்மட்டம் 48 அடியாகும். அணையின் தற்போதைய நீர்மட்டம் 42 அடியானதை தொடர்ந்துதாமிரபரணி ஆற்றில் நீர் திறந்து விடப்படவுள்ளது. இதனால் அதில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தாமிரபரணி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியுள்ள நிலையில் மேலும் மழை நீடிக்கும் பட்சத்தில் நீர் நிலை உயர வாய்ப்புள்ளது.மேலும் மழை நீரும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் பாய்ந்தோடும்.
இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கட்டுக்கடங்காத வெள்ளம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கைநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
பேச்சிப்பாறை அணையின் மட்டம் 42 அடியானதை தொடர்ந்து நேற்று பிற்பகல் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கையாககரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றார்.
தற்போது ஓடி வரும் அதிக நீரினால் குழித்துறை சுப்ரமணிய சுவாமி கோவில் மண்டபம் நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்துநீர்ப்பெருக்கு அதிகரித்து வருவதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications