For Quick Alerts
For Daily Alerts
Just In
லாரியில் சென்ற ரயில் என்ஜின் கவிழ்ந்தது!
திருச்சி:
கண்டெய்னர் லாரியில் வைத்து கொண்டு செல்லப்பட்ட ரயில் என்ஜின் பாரம் தாங்காமல் கவிழ்ந்து சாலையில் விழுந்ததால்திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி பொன்மலை ரயில் என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலையில், சூடான் நாட்டுக்குக் கொண்டு செல்வதற்காக ரயில்என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் முழுமையாகத் தயார் செய்யப்பட்ட ஒரு ரயில் என்ஜின், சென்னைக்குதுறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்காக கண்டெய்னர் லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.
பொன்மலை ரயில் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து அந்த லாரி வெளியே வந்து சிறிது தூரம் சென்றவுடனேயேஎன்ஜினின் பாரம் தாங்காமல் சாலையோரம் கவிழ்ந்து விழுந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. உடனடியாக விரைந்துவந்த பொன்மலை தொழிற்சாலை அதிகாரிகளும், ஊழியர்களும், கிரேன் மூலம் என்ஜினை மீட்டனர்.
Comments
Story first published: Wednesday, December 7, 2005, 5:30 [IST]