கடலூரில் 2 தமிழ் தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

தமிழர் விடுதலைப் படை என்ற தடை செய்யப்பட்ட நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 2 பேரை கடலூர் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கடலூர் டெல்டாப் பகுதியில், போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆலப்பாக்கம் என்ற இடத்தில் சிவா என்றஎழுமலை என்பவர் தலைமறைவாக இருப்பதாக தெரிய வந்தது.

தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர் சிவா. இவர் மீது 20க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீண்ட காலமாக இவர் தேடப்பட்டு வந்தார்.

ஆலப்பாக்கத்தில் அவர் தலைமறைவாக இருப்பதை அறிந்த போலீஸார் அங்கு விரைந்து சென்று சிவாவை வளைத்துப் பிடித்துக்கைது செய்தனர். நெல்லிக்குப்பத்திற்கு அவரைக் கொண்டு சென்று அங்கு விடிய விடிய அவரிடம் போலீஸார் விசாரணைநடத்தினர்.

இதேபோல, குறிஞ்சிப்பாடியில் சந்தோஷ் என்ற தமிழர் விடுதலைப் படை தீவிரவாதியையும் போலீஸார் கைது செய்தனர். இவரைவிருத்தாச்சலத்திற்கு அழைத்துச் சென்று அங்கு போலீஸார் விசாரணை நடத்தினர்.

மணல்மேடு சங்கர் என்ற தமிழ்த் தீவிரவாதியின் கூட்டாளி சந்தோஷ் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+