திமுக தரும் கெட்ட யோசனை: பாஜக தாக்கு
சென்னை:
தமிழக மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கினால் அது அதிமுக அரசுக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்துவிடும் என திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கெடுதலையாக யோசனை கூறியதால்தான் மத்திய அரசு கூடுதல் நிவாரணநிதியை ஒதுக்காமல் அமைதி காக்கிறது என தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் சமீபகாலமாக அதிமுகவுக்கு ஆதரவான நிலையை பாஜக எடுத்து வருகிறது. இந் நிலையில்சென்னையில் செய்தியாளர்களிடம் ராதா பேசுகையில்,தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ. 13,000 கோடியை ஒதுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்திவருகிறார். ஆனால் வெறும் ரூ. 500 கோடியுடன் நின்று விட்டது மத்திய அரசு.
இது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் மழை, வெள்ள சேதம் மிகவும் கடுமையாக இருக்கும் நிலையில், விரைந்துநிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏராளமான பணம் தேவைப்படுகிறது. இந்த நிதியை ஒதுக்க வேண்டிய மத்திய அரசு பெருத்தஅமைதி காப்பது வியப்பாக உள்ளது.
எங்கே, ஜெயலலிதா கேட்ட நிதியைக் கொடுத்தால், அதை வைத்து அவர் சீரமைப்புப் பணிகளைச் செய்து, அது அதிமுக அரசுக்குநல்ல பெயரை ஈட்டித் தந்து விடுமோ என்ற பயத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் யோசனையைக் கேட்டு காங்கிரஸ் கூட்டணிஅரசு அமைதி காப்பதாகத் தோன்றுகிறது.
உடனடியாக தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ. 1,000 கோடி நிதியை ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும்பாஜகவினர் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மாபெரும் போராட்ட நேரிடும் என்றார்.












Click it and Unblock the Notifications