சென்னையில் அமையும் பிஎம்டபிள்யூ தொழிற்சாலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

BMW Group submitting a MOU to Chief Minister Jayalalitha
ஜெயலலிதாவுடன் பி.எம்.டபிள்யூ. நிறுவன பொது மேலாளர்

ஜெர்மன் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ சென்னையில் தனது தொழிற்சாலையை நிறுவ உள்ளது.

கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் கடும் போட்டியிட்ட நிலையில் தமிழகத்தையே அந்தநிறுவனம் தேர்வு செய்துள்ளது.

ரூ. 180 கோடியில் சென்னை மறைமலை நகரில் தனது கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க பிஎம்டபிள்யூ முடிவுசெய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

ஒப்பந்தத்தில் பிஎம்டபிள்யூ பொது மேலாளர்களான ரொனால்ட் ஜென்ட்ஸ், பீட்டர் ரோண்ட்னாபில் ஆகியோரும் தமிழகதொழில்துறைச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.

பல்வேறு மாநிலங்களும் பல சலுகைகளை அளிக்க முன் வந்த நிலையிலும் தமிழகத்தில் நிலவும் தொழில்துறைக்கு ஆதரவானசூழல், அடிப்படைக் கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு, ஏற்றுமதி-இறக்குமதி வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சென்னையில்இந்தத் தொழிற்சாலையை அமைக்க பிஎம்டபிள்யூ தேர்வு செய்தது.

ஆண்டுக்கு ரூ. 2.19,240 கோடி புழங்கும் பிஎம்டபிள்யூ உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாகும்.

மறைமலை நகரில் உள்ள மகிந்திரா வோர்ல்ட் சிட்டி வளாகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் பிஎம்டபிள்யூவின் தொழிற்சாலைஅமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+