For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதி ஒதுக்கினால் ஜெ. ஒழுங்காக கொடுப்பாரா?: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுனாமி நிவாரண நிதியையை பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக வழங்காத ஜெயலலிதா, இப்போது மழை வெள்ள நிவாரணநிதியை மத்திய அரசு வழங்கினால் மட்டும் முறையாக கொடுத்து விடப் போகிறாரா என்று திமுக தலைவர் கருணாநிதிகேட்டுள்ளார்.

தமிழக மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ. 13,000 கோடியை முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிடம் கோரியுள்ளார். ஆனால்மத்திய அரசோ வெறும் ரூ. 500 கோடியை மட்டுமே வழங்கியுள்ளது.

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்குவதை திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தான் தடுப்பதாக பாஜக உள்ளிட்டகட்சிகள் குறை கூறியுள்ளன.

இந் நிலையில் திமுக நாளிதழான முரசொலியில் கருணாநிதி எழுதியுள்ள ஒரு பதிலில்,

சுனாமிக்கு மத்திய அரசு வழங்கிய நிவாரண நிதியையே தமிழக ஆட்சியாளர்கள் முறையாக வழங்கவில்லை. அதில் ஏகப்பட்டமுறைகேடுகள்.

இந் நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளுக்காக மத்திய அரசு உடனடியாக அதிக அளவில் நிவாரண நிதி வழங்கினால்,உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கா அதை ஆட்சியாளர்கள் கொடுப்பார்கள்?

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட அளவில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள்அடங்கிய குழுக்களை தமிழக அரசு அமைக்க முன் வராதது ஏன்?

அமராவதி பாலம் இடிந்து, நொறுங்கிப் போய் விட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் பாலம் அப்படியேதான் உள்ளது.ஜெயலலிதாதான் அகழி தோண்டிக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இதற்கிடையே சுனாமி நிவாரண நிதியில் ஏகத்துக்கும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான ஆவணங்களைசில மூத்த தமிழக அரசு அதிகாரிகளே கருணாநிதி வசம் கொண்டு போய் சேர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதை வைத்துக் கொண்டு தான் மீண்டும் மீண்டும் சுனாமி நிவாரண நிதி மோசடியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் கருணாநிதிஎன்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இந்த விஷயத்தில் கருணாநிதியுடன் மோத தமிழக அரசு தயாராக இல்லையாம்.

காரணம், கருணாநிதி வசம் உள்ள ஆவணங்களில் எல்லாமே முழு விவரமாக உள்ளதாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X